Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விவாகரத்து கோரி மனு: நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜர்

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். 2009ம் ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி இருந்தார். பின்னர் இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு மத்தியஸ்தர் தள்ளிவைத்தார்.