Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒரு நாள் ஹெச்.எம் ஆன மாணவி

புதுக்கோட்டை: அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியையாக 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பொறுப்பேற்று செயல்பட்டார். அதன் விவரம் வருமாறு: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இவர்களிடம் தலைமை பண்பை உருவாக்கும் வகையில் சிறந்த மாணவி ஒருவரை தேர்ந்தெடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஒருநாள் பணியமர்த்த ஆசிரியர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி இதே பள்ளியில் 6ம் வகுப்பு முதல் படிப்பு மற்றும் தனித்திறமையில் சிறந்து விளங்கும், 11ம் வகுப்பு உயிரியியல் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் படிக்கும் மெய்வர்சிதா என்ற மாணவி தலைமை ஆசிரியையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், நேற்றுமுன்தினம் பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். மேலும் ஆசிரியர், ஆசிரியைகள், சக மாணவிகள் அவரை பாராட்டினர். தலைமை ஆசிரியை இருக்கையில் அமர்ந்த மாணவி மெய்வர்சிதா, ஆசிரியர்கள், மாணவிகள் வருகைப்பதிவேடு மற்றும் தலைமை ஆசிரியை மேற்கொள்ளும் அன்றாட பணிகளை பார்வையிட்டார். பின்னர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவிகளையும், ஆசிரியர்களையும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார்.