Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

64 அடி உயர தூக்கு தேர் கவிழ்ந்தது பக்தர்கள் உயிர் தப்பினர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தில் பழமையான சூலபிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை ஆடி மாதங்களில் தூக்கு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2022க்கு பிறகு நேற்று முன்தினம் இரவு விநாயகர் கோயில் திடலில் இருந்து 64 அடி உயரம், 3 டன் எடை கொண்ட தூக்கு தேர் தயார் செய்யப்பட்டு, தேரில் சூலபிடாரியம்மனை வைத்து 300 வாலிபர்கள் தோளில் சுமந்து கடையம் கிராமத்தில் ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை தேர் நிலைக்கு வந்தபோது, இடது பக்கமாக தேரை தூக்கி நடந்து வந்த வாலிபர்களின் கால் தெருவில் இருந்த தண்ணீரில் வழுக்கி தேர் இடது பக்கம் சாய்ந்து மின்கம்பிகள் மீது கவிழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும், பக்தர்கள் விலகி சென்றதாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் 2 பேருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டது. கவிழ்ந்த தேரை அரை மணி நேரத்தில் மீண்டும் எடுத்து தோளில் சுமந்து கொண்டு சூலபிடாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.