Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எஸ்.ஐ. முதல் ஏடிஜிபி வரை அதிகாரிகளின் பட்டியல்: டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பணியிட மாற்ற நடவடிக்கை தொடர்பாக உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ளவர்களில் ஜூன் 30ம் தேதிக்குள் 3 ஆண்டுகள் பணி நிறைவடையும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக காவல் துறையில் பணியிட மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது: சொந்த ஊர் அல்லது தொடர்ந்து ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் காவல் துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதாவது உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ளவர்களில் ஜூன் 30ம் தேதிக்குள் 3 ஆண்டுகள் பணி நிறைவடையும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று, நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள காவல்துறை அதிகாரிகளையும், ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.