Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி இளைஞர் பலி

செய்யூர்: சூனாம்பேடு அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் (23). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரியும் இவர் முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். சூனாம்பேடு அடுத்த கோட்டைக்காடு அருகே சென்ற போது எதிர் திசையில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்தகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற சூனாம்பேடு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.