2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் சென்றார். பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் இந்த பயணத்தின்போது, பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள 1020 மெகாவாட் நீர் மின் நிலையத்தை அந்த நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைக்க உள்ளார். அதேபோல் பூட்டான் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலகளாவிய அமைதி பிராத்தனை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.