Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓரமாக போக சொன்னதால் ஆத்திரம் பெண் தூய்மை பணியாளரை தாக்கிய காஷ்மீர் வாலிபர்

மாதவரம், டிச.9: ஓரமாக போக சொன்னதால் ஆத்திரமடைந்து பெண் தூய்மை பணியாளரை தாக்கி, கழுத்தை அறுத்து விடுவதாக இந்தியில் பேசிய ஜம்மு காஷ்மீர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொருக்குபேட்டையை சேர்ந்தவர் லட்சுமி (43). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார். வழக்கம் போல் லட்சுமி நேற்று முன்தினம் எழும்பூர் காந்தி இர்வின் பாலம் மற்றும் ஈவெரா சாலை சந்திப்பில் தூய்மை பணி மேற்கொண்டு இருந்தார். அப்போது நடந்து சென்ற வாலிபரை, லட்சுமி ஓரமாக போக சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், இந்தியில் லட்சுமியை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். அதோடு இல்லாமல் லட்சுமியை சைகை மூலம் கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி உதவி கேட்டு சத்தம் போட்டார். உடனே சாலையில் சென்றவர்கள் ஓடிவருவதை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து லட்சுமி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிதத்ார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து வசிாரணை நடத்திய போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவ்ரி மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திர் சிங் (25) என்றும், இவர் எழும்பூர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ரவீந்திர் சிங் மீது தமிழ்நாடு பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.