Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரியாபட்டி அருகே டூவீலர்கள் நேருக்குநேர் மோதி சிறுமி, முதியவர் பரிதாப பலி

காரியாபட்டி : காரியாபட்டி அருகே டூவீலர்கள் நேருக்குநேர் மோதி சிறுமி, முதியவர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (35). இவரது மகள் தர்ஷினி (12). இவர்கள் இருவரும் உறவினர் மணிகண்டன் என்பவருடன் நேற்று டூவீலரில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரியாபட்டி கஞ்சமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த டூவீலருடன் நேருக்குநேர் மோதியது.

இதில் சிறுமி தர்ஷினி, மற்றொரு டூவீலரில் வந்த கள்ளங்குளம் கிராமத்தை சேர்ந்த மொந்த அம்பலம் (75) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்த பாண்டீஸ்வரி, மணிகண்டன், மற்றொரு டூவீலரில் வந்த கள்ளங்குளம் சிவப்புராஜா (65) ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.