Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

புலி வேடமிட்டு உலா வந்த நாய்: பொதுமக்கள் பீதி

புதுச்சேரி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறுத்தைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் புதுச்சேரி லாஸ்பேட்ைட குறிஞ்சி நகரில் மர்ம நபர்கள் அங்குள்ள தெரு நாயை பிடித்து புலி போல் வண்ணம் தீட்டி நேற்று முன்தினம் இரவு முதல் தெருவில் நடமாட விட்டுள்ளனர்.

புலி வேடமிட்ட நாய் பல்வேறு தெருக்களில் உலா வந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், ஊருக்குள் புலி வந்துவிட்டதாக பீதி அடைந்தனர். பின்னர் நன்கு உற்று பார்த்தால் தெரு நாய் என்பது தெரிய வந்தது. அதன்பின்னர் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்த வீடியோ புதுவை பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.