ஒளியின் திருநாள் “தீபாவளி” எனும் சொல், நம் மனதில் ஆனந்தம், ஒளி, சுத்தம், புதிய தொடக்கம் என்பவற்றை நினைவூட்டுகிறது. தீயின்மீது நன்மையின் வெற்றி, இருள்மீது ஒளியின் வெற்றி, சோகத்தின்மீது சந்தோஷத்தின் வெற்றி என்பதே தீபாவளி திருநாளின் அடிப்படை. இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் முக்கிய குறிக்கோள் பசுமை. “தீபாவளி” என்ற சொல் “தீபம் + ஆவளி” என்பதிலிருந்து வந்தது. அதாவது, பல தீபங்கள் எனும் பொருள். இத்திருவிழா, அசுரனை வீழ்த்திய தெய்வத்தின் வெற்றியையும், மனித உள்ளத்தில் நன்மையின் வெளிச்சத்தை பரப்புவதையும் குறிக்கிறது.2025 தீபாவளி அக்டோபர் 20, திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழா வழக்கம்போல் ஐந்து நாட்கள் நீடிக்கும். தான்தேரஸ் (Dhanteras), நரகாசதுர்த்தசி / சோதி தீபாவளி (Naraka Chaturdashi), லக்ஷ்மி பூஜை (முக்கிய தீபாவளி நாள்) , கோவர்தன் பூஜை / அன்னகூட் (Govardhan Puja / Annakut) பாய் டூஜ் (Bhai Dooj) உள்ளிட்ட பூஜைகள் ஒவ்வொரு வீட்டின் வழக்கப்படி கடைப்பிடிக்கப்படுகிறது.
முறைகள்
லக்ஷ்மி கணேஷ பூஜை செல்வம் மற்றும் செழிப்பை வேண்டி லக்ஷ்மி தேவியும், தடைகளை நீக்கும் கணேஷரும் வழிபடப்படுவர். பூஜைக்கு நறுமணம், பூக்கள், தீபம், இனிப்புகள், பழங்கள் அனைத்தும் சேர்க்கப்படும். “ஓம் லக்ஷ்ம்யே நம:” எனும் மந்திரத்துடன் அர்ச்சனை நடைபெறும்.
குபேர பூஜை
செல்வத்தின் காவலரான குபேரனை வழிபடுவது வழக்கம். வணிகத்துறையினர் தங்கள் கணக்கு புத்தகங்கள், தொழில் பொருட்கள் முதலியவற்றுக்கு பூஜை செய்வர்.
நரகாசதுர்த்தசி வழிபாடு
இந்த நாளில் அருணோதயம் முன்னதாக எண்ணெய்க் குளியல் செய்வது பாரம்பரியம். இது உடல், மன சுத்தத்தைக் குறிக்கிறது. கிருஷ்ணரின் நரகாசுரன் வதம் நினைவுகூரப்படுகிறது.
கோவர்தன் பூஜை மற்றும் அன்னகூட்
கோவர்தன் மலை வழிபாட்டின் நினைவாக, வீட்டில் பலவகை உணவுகள் தயாரித்து “அன்னகூட்” எனப்படும் முறையில் அர்ப்பணிக்கப்படுகிறது.
தீபாவளி பூஜை நேரம்
லக்ஷ்மி பூஜை நேரம் (முகூர்த்தம்)
2025 இல் லக்ஷ்மி பூஜைக்கான முக்கிய நேரம் மாலை 7:08 முதல் 8:18 மணி வரை என கணிக்கப்பட்டுள்ளது.இந்த வருட தீபாவளி பசுமையான வாழ்வியலை முன்னிறுத்தி கொண்டாடப்படுகிறது. பசுமை தீபாவளி மாசில்லா விழா. சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில் “Eco-Friendly Diwali” என பல அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. மண் மற்றும் கன்றின் சாணத்தால் தயாரிக்கப்படும் இயற்கை தீபங்கள் (cow dung diyas) அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
டிஜிட்டல் தீபா இயக்கம்
“Ek Diya Ram Ke Naam” போன்ற முயற்சிகள் மூலம் உலகம் முழுவதும் உள்ளவர்கள் இணைய வழியாக தீபம் ஏற்றி பங்கேற்க முடியும். அரசு மற்றும் சமூக நிகழ்வுகள் மாநில அரசுகள், நகராட்சிகள் “விளக்கு திருவிழா” மற்றும் “பசுமை தீப கண்காட்சிகள்” நடத்தவிருக்கின்றன. டெல்லியில் 2 லட்சம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேதி
2025 தீபாவளி 20 அல்லது 21 அக்டோபரா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் காசி பஞ்சாங்க மன்றம் வெளியிட்ட அறிவிப்பின்படி அக்டோபர் 20, 2025 என்பதே உறுதி செய்யப்பட்டுள்ளது. 2025 இல், நாம் ஏற்றும் ஒவ்வொரு தீபமும் நம் குடும்பத்திலும், சமூகத்திலும், இயற்கையிலும் அமைதி, செழிப்பு, பசுமை பரவச் செய்யட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் .
- எஸ்.விஜயலட்சுமி