Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விஷ பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

செய்யூர்: சூனாம்பேடு அருகே விஷ பாம்பு கடித்ததில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(55). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை சூனாம்பேடு அடுத்த ஈசூர் பகுதியில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த விஷ பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.