வாஷிங்டன்: உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வராமல் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது. ரஷ்யாவின் தாக்குதலை தடுப்பதற்கு உக்ரைன் பல்வேறு முயற்சிளை மேற்கொண்டு வருவதோடு தகுந்த பதிலடியும் கொடுத்து சமாளித்து வருகின்றது.உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் உக்ரைனுக்கு எதிராக போரை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில் உக்ரைன் மிக கடுமையாக தாக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே உக்ரைனுக்கு ரூ.2781கோடி மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் ஒப்புதல்அளித்துள்ளது. இதில் அமெரிக்க கவச வாகனங்களின் விநியோகம், பராமரிப்பு, பழுதுபார்ப்புகாக ரூ.1295கோடி மற்றும் வான் ஏவுகணை அமைப்புகளுக்கு ரூ.1485கோடியும் அடங்கும்.