Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரக்கூடிய நிலையில் டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுவரக்கூடிய நிலையில் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சீர் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தம் 6.36 கோடி சிறப்பு தீவிர திருத்தப் படிவங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த படிவங்களை நிரப்பு கொடுக்க டிசம்பர் 4-ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசியல் கட்சியினரின் கோரிக்கைபடி டிசம்பர் 11-ம் தேதி வரை படிவங்களை நிரப்பிக்கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 1-ம் தேதி 5.8 கோடி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வாக்காளர் பட்டியலில் 77.52 லட்சம் பேர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, இறந்தோர் 25.72 லட்சம் பேர், தொடர்புகொள்ள முடியாதவர்கள் 8.95 லட்சம் பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களில் 39.27 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3.32 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 40 லட்சம் வாக்குகள் உள்ள நிலையில், 10.40 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.