சென்னை: நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் துணைக்கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவடைகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே 2025-26ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு 12ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்று சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2025 பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்கள் துணைக்கலந்தாய்வுக்கு https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாளையுடன் (ஆகஸ்ட் 12) அதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைகிறது. தொடர்ந்து துணைக்கலந்தாய்வானது ஆகஸ்ட் 21ம் தேதி துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement