Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை மீண்டும் உயர்வு: ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 250 பூண்டு 350க்கு விற்பனை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் அனைத்து காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 700 வாகனங்களில் 7 ஆயிரம் டன் காய்கறிகள் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று காலை 540 வாகனங்களில் இருந்து 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்தன. இந்த நிலையில், இன்று காலை வரத்து குறைவால் மீண்டும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெங்காயம் 30 இருந்து 35 க்கும் சின்ன வெங்காயம் 60 இருந்து 70 க்கும் தக்காளி 30 இருந்து 40 க்கும் பீட்ரூட், சவ்சவ் மற்றும் கேரட் 50 இருந்து 60 க்கும் உருளைகிழங்கு, நூக்கல் 35 இருந்து 45 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முள்ளங்கி, கோவைக்காய், கொத்தவரங்காய் 30 இருந்து 40 க்கும் வெண்டைக்காய், பாகற்காய், சேனை கிழங்கு மற்றும் வெள்ளரிக்காய் 40 இருந்து 50க்கும் முட்டைகோஸ் காலிபிளவர் 25 இருந்து 35 க்கும் காராமணி 60 இருந்து 70க்கும் புடலங்காய் 45 இருந்து 55 க்கும் முருங்கைக்காய் 60 இருந்து 80 க்கும் பச்சை மிளகாய் 80க்கும் பூண்டு 150 இருந்து 380 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் அவரைக்காய் 80 இருந்து 90 க்கும் பீரக்கங்காய் 70 இருந்து 80 க்கும் வண்ண குடமிளகாய் 180 இருந்து 190க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறியதாவது; வரத்து குறைவால் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

மழைவிட்டு விட்டு பெய்து வருவதால் தோட்டத்தில் இறங்கி காய்கறிகளை விவசாயிகள் பறிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளதால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. மழை நின்றுவிட்டால் அடுத்த ஒரு வாரத்தில் காய்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினார்.