ஆசிய கோப்பை: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. ...
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. ஆசிய கோப்பை குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய தெம்புடன் இந்தியாவும், அந்தத் தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியுடன் பாகிஸ்தானும் களமிறங்குகிறது. ...
ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 சுற்றில் இன்று மோதல்: தெம்புடன் களமிறங்கும் இந்தியா... பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான்
துபாய்: 2025 ஆசிய கோப்பை டி 20 தொடரின் சூப்பர் 4 சுற்றில், இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று சந்திக்க உள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறுகிறது. 2025 ஆசிய கோப்பை குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய தெம்புடன் இந்தியாவும், அந்தத் தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியுடன் பாகிஸ்தானும் களமிறங்குவதால், இந்த போட்டியில் அனல்...
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று இலங்கை திணறல் ஆட்டம்
துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் நேற்று, இலங்கை அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து, துபாயில் நேற்று நடந்த முதல் சூப்பர்...
இந்திய மகளிர் போராடி தோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
புதுடெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், தொடரை வெல்லும் முனைப்புடன், புதுடெல்லியில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு...
கொரியா மகளிர் டென்னிஸ் இகா ஸ்வியடெக் மெகா வெற்றி: ஏகதெரினாவுடன் இன்று பைனலில் மோதல்
சியோல்: கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தென் கொரியா தலைநகர் சியோலில் கொரியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் காலிறுதிப் போட்டி ஒன்றில் செக் வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தி, இகா ஸ்வியடெக்...
சூப்பர் 4 போட்டியில் இன்று சாத்தியம் தேடும் பாகிஸ்தான் சாதிக்கும் முனைப்பில் இந்தியா: துபாயில் இரவு 8 மணிக்கு மோதல்
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. சூப்பர் 4 சுற்றில் இந்தியா மோதும் முதல் போட்டி இன்று, துபாயில் பாகிஸ்தானுடன் நடைபெற உள்ளது. கடந்த 14ம் தேதி பாகிஸ்தானுடன் நடந்த லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, 25 பந்துகள்...
சாதனை படைப்பாரா குல்தீப் யாதவ்?
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இதுவரை, 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 19, ஒரு நாள் போட்டிகளிலும், 7 விக்கெட்டுகள் டி20 போட்டிகளிலும் வீழ்த்தியவை. குல்தீப் யாதவ், இன்னும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால், ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை படைப்பார். இந்த...
20 கிமீ நடை போட்டி மரியாவுக்கு தங்கம்
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் பிரிவு 20 கிமீ நடை போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரெஸ், ஒரு மணி நேரம், 25:54 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். மெக்சிகோ வீராங்கனை அலெக்னா கோன்சலேஸை விட 12...