Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் உச்ச காலமான இம்மாதங்களில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவது மிகவும் சிரமம் என்பதால் ஒத்தி வைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அலுவலரிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் உச்சகாலமான இம்மாதங்களில் எஸ்.ஐ.ஆரை செயல்படுத்துவது மிகவும் சிரமம் என்பதால் எஸ்.ஐ.ஆர். நடத்துவதை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் விவரம் பின்வருமாறு: எந்த சூழ்நிலையில் ஆதார் அடையாள ஆதாரமாக எடுக்கப்படும், எந்த சூழ்நிலையில் எடுக்கப்படாது என்பது பற்றி எத்தனை சந்தேகங்கள் இருக்கும். எனவே, இணைப்பு III ஆதாரை எந்த நிபந்தனையும் இல்லாமல் உருப்படி எண் 12 ஆக குறிப்பிட வேண்டும். எண்ணிக்கை காலம் 4.11.2025 முதல் 4.12.2025 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் உச்ச காலம், இந்த காலத்தில் கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வாக்காளர்கள், அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாக இருப்பதால், எண்ணிக்கை படிவங்களைப் பெற்ற, நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற நியாயமான அச்சம் உள்ளது. மேலும் இப்பணிக்கான காலங்களில் கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறை வருவதால் அவர்கள் அறிவிப்புகளுக்கு இணங்கி, விசாரணைகளில் கலந்துகொண்டு, சரிபார்ப்பு செயல்முறையை முடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நிச்சயமாக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதாகும்.

‘சாதாரண குடியிருப்பு’ அளவுகோலின் அடிப்படையில் எந்த தகுதியும் இல்லாமல், பீகார் எஸ்.ஐ.ஆர் பீகார் வாக்காளர்களை தமிழ்நாடு வாக்காளர்களாக சேர்ப்பதற்கான அடிப்படை ஆவணமாக எடுக்கப்படுமா? பெரும் எண்ணிக்கையில் தகுதியற்ற வாக்காளர்கள் இந்த செயல்முறையில் சேர்க்கப்படலாம் என்ற அரசியல் கட்சிகளின் அச்சம் இணைப்பு III ஐ படிப்பதிலிருந்து வலுப்படுத்தப்படுகிறது. இதை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும், மற்றும் 27.10.2025 தேதியிட்ட அறிவிப்பில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கண்ட சூழ்நிைகளின் பார்வையில், இந்தியத் தேர்தல் ஆணையம் முதல் குறிப்பில் படித்த 27ம் தேதிட்ட அறிவிப்பை திரும்பப் பெறவும், அனைத்து கவலைகளையும் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிடவும், மேலும் ஜனநாயக முறையில் எஸ்.ஐ.ஆர் நடத்தவும் வேண்டுகிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.