Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநிலத்தில் உரம், விதைகள் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் செலுவராயசாமி தகவல்

பெங்களூரு: மாநிலத்தில் உரம் மற்றும் விதைகளுக்கு பற்றாக்குறை இல்லை. விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை என்று வேளாண் அமைச்சர் என்.செலுவராயசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மாநிலத்தில் ஏப்ரல் முதல் ஜூலை 21 வரை, 6.80 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை இருந்தது. ஆனால் 8.50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 6.55 லட்சம் மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டு, 1.94 லட்சம் மெட்ரிக் டன் கிடங்கில் இருப்பில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை 21 வரை, 3.02 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி உரத்தின் தேவை இருந்தது. 2.89 லட்சம் மெட்ரிக் டன் உரம் வாங்கப்பட்டது, அதில் 2.07 மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 81 மில்லியன் டன் டிஏபி மீதமுள்ளது, விவசாயிகள் அருகிலுள்ள கடைகளில் இருந்து வாங்கலாம்.

மேலும் 6.47 லட்சம் மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரத்தின் தேவை உள்ளது, அதில் 12 லட்சம் மெட்ரிக் டன் வாங்கப்பட்டுள்ளது. இதில் 7.39 லட்சம் மெட்ரிக் டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது, மீதமுள்ளது 4.62 லட்சம் மெட்ரிக் டன். எனவே, மாநிலத்தில் உரம் அல்லது விதைப்பு விதைகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. மாவட்ட அளவில் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 1,799 மெட்ரிக் டன், சிக்கபள்ளாபுராவில் 2,979 மெட்ரிக் டன், ராம்நகராவில் 3,128 மெட்ரிக் டன், மண்டியாவில் 7,065 மெட்ரிக் டன் மற்றும் தாவணகெரேவில் 7,389 மெட்ரிக் டன். பெலகாவியில் 10,622 மெட்ரிக் டன், பீதரில் 2,444 மெட்ரிக் டன், துமகூருவில் 1,710 மெட்ரிக் டன் யூரியா இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.