Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டையன் கருத்துதான் என்னுடைய கருத்து அதிமுக ஒன்றுபட வேண்டும்: சசிகலா

வி.கே.சசிகலா வெளியிட்ட அறிக்கை: அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். ஜெயலலிதா சூளுரைத்ததுபோல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு பேரியக்கம் என்பதை மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் உடனிருந்தவர்.

தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் கருத்து தான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து, தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. ஒன்றுபட்ட, வலிமைமிக்க அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.