ஸ்ரீ நாகம்மாதேவி கோயிலில் 33வது ஆண்டு பிரம்மோற்சவம்: வரும் 27ம் தேதி தொடங்கி ஆக 5ம் தேதி வரை நடக்கிறது
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஸ்ரீநாகம்மாதேவி கோயில் 33வது பிரம்ம ரதவுற்சம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி ஸ்ரீநாகம்மாதேவி பிரம்ம ரதவுற்சவம் நடக்கிறது. பெங்களூரு சிவாஜிநகர், செயின்ட் ஜான்ஸ் வீதியில், அஞ்சல க ம் எதிரில் ஸ்ரீ நாகம்மாதேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி 33வது ஆண்டு விழா வரும் 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரும் 27ம் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜை, கங்கா பூஜை, விஷவக்னே கணபதி பூஜை, சுத்தி புண்ணியாகம், ரக்ஷ பந்தனம், மிருதங்க சங்கிரகனம், அங்குரார்பனம், பலிஹரணம் மற்றும் கரக ஊர்வலம் நடக்கிறது.
வரும் 28ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலச ஸ்தாபனம், நாகசாந்தி ஹோமம், மகாமங்களாரத்தி நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணிக்கு நாக பஞ்சமி சண்டி பாராயணம், மாலை 6 மணிக்கு சண்டிகா ஹோமம், மகா மங்களாரத்தி நடக்கிறது. 30ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பகவதி சேவை நடக்கிறது. 31ம் தேதி காலை ஸ்ரீநாகம்மாதேவிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி காலை பொங்கல் வழிப்பாடு, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
மாலை மா விளக்கு சேவை.ஆகஸ்ட் 2ம் தேதி ஸ்ரீசனிபகவான் மற்றும் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 3ம் தேதி ஸ்ரீநாகம்மாதேவி பிரம்ம ரதவுற்சவம் நடக்கிறது. 4ம் தேதி வசந்த உற்சவமும், 5ம் தேதி ஊஞ்சல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீநாகம்மாதேவி டெம்பள் பப்லிக் சாரிடபல் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.