அகமதாபாத்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷமா பர்வீன் அன்சாரி. தற்போது பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். இவரது பெயரில் 2 பேஸ்புக் பக்கங்கள் உள்ளன. இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிராகவும், அல் கொய்தாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவிட்டு வந்துள்ளார்.
இவரை 10,000க்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர். குறிப்பாக அல்கொய்தா இந்தியா என்ற தீவிரவாத அமைப்பின் கருத்துகளை பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று ஷமா பர்வீனை குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீஸ்(ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.இது போன்ற தீவிரவாத கருத்துகளை பதிவிட்டு வந்த 4 பேர் கடந்த வாரம் கைதானது குறிப்பிடத்தக்கது.