Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிதி மற்றும் நிர்வாக சுயாட்சி இல்லாததால் தனி தேர்தல் துறையை உருவாக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்ட பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு நிதி மற்றும் நிர்வாக சுயாட்சி இல்லை. அவரது அலுவலகம் நிதித் துறையின் சிறிய நிரந்தர முன்பணத்தை நம்பி வரையறுக்கப்பட்ட நிதி அதிகாரங்களுடன் செயல்படுகிறது. தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் உள்துறையின் துணைப் பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியால் நடத்தப்படுகிறது. ஆனால், தலைமை நிர்வாக அதிகாரி கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்.

வேறு எந்த துறையில் இருந்தும் முற்றிலும் தனித்து செயல்படும் தேர்தல் துறையை உருவாக்க வேண்டும். கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் அல்லது பிற துறைகளின் செயலாளருக்கு இணையான நிதி அதிகாரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும். தலைமை தேர்தல் அதிகாரிக்கு நிதி மற்றும் நிர்வாக சுயாட்சி இல்லை. எனவே தனி நிதி ஆலோசகரை நியமிப்பது உள்பட சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.