காங்கிரஸ் எம்பி ராபர்ட் புரூஸ்க்கு எதிராக நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை
புதுடெல்லி: கடந்த 2024ஆம் ஆண்டு திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் ப்ரூஸ் சுமார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அவரது வெற்றியை எதிர்த்து பாஜ சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராபர்ட் ப்ரூஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் ராபர்ட் புரூஸ் எம்பிக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கின் அசல் ஆவணங்களை நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.