கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை; மு.க.ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவின் காவிரி வனவிலங்கு சரணாலயம் அருகே மரியமங்களா என்ற அடர்ந்த வனப்பகுதி...

தமிழர்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற கர்நாடகா வனத்துறையினருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம்

சென்னை: கர்நாடகா வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற கர்நாடகா வனத்துறையினருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கர்நாடக மாநிலம் ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கை பாராட்டுக்குரியது: கி.வீரமணி

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கை பாராட்டுக்குரியது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஆளுநரின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தரும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "தமிழ் மொழி வாழ்த்துக்கு முதலிடம் தந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கைக்குப்...

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிட கோரி தமிழக அரசு, திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை: கர்நாடக அரசு தனது எதிர்ப்பை மனுவாக தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது

புதுடெல்லி: காவிரிலிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு முதலில் கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால்,...

வழக்கமான பருவக்காலத்திற்கு முன்பாகவே சென்னையில் எச்1என்1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் வழக்கமான பருவக்காலத்திற்கு முன்பாகவே எச்1என்1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்புகள் உயரத் தொடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாகவே நகரில் உள்ள அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் எச்1என்1 காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 3 முதல் 4 நோயாளிகள் வரை சிகிச்சைக்காக...

நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது என்று ஒரு மோசமான பாசிச அரசாக தவெக அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது என்று ஒரு மோசமான பாசிச அரசாக இன்றைக்கு தவெக அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். வடக்கு மண்டலம் திமுக வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞர் அணி...

தமிழர்கள் 3 பேரை கர்நாடக வனத்துறையினர் அநியாயமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழர்கள் 3 பேரை கர்நாடக வனத்துறையினர் அநியாயமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். '3 பேர் கொலையில் குற்றமிழைத்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் கர்நாடக வனத்துறை ஈடுபடுகிறது' என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான...

சுதந்திர தின விழாவின்போது மயக்கமடைந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!

சென்னை: சுதந்திர தின விழாவின்போது மயக்கமடைந்து உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் A.தர்மராஜ் (வயது 56) நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: எனது அன்பிற்குரிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நிகழ்காலத்தைக் கடந்து சிந்திக்கும் உறுதியும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிலையான மாற்றங்களாக உருவாக்கும் முனைப்பும் கொண்டவர்களால்தான் இந்தியாவின் எதிர்காலம் கட்டியெழுப்பப்படும். நமது மக்களின் ஆற்றல்...

எண்ணூர் கழிமுகம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து கிடப்பது குறித்து விசாரணை; மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!

  சென்னை: சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு...