ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு மட்டுமே சிறப்பு தொழுகை நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு மட்டுமே சிறப்பு தொழுகை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இமாம் உசேன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு தர்காவில் ரம்ஜான், பக்ரீத் அன்று மட்டுமே சிறப்பு தொழுகை என்பதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியிலுள்ள...

தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவாதம் கொடுத்தால் அதனை காப்பாற்றும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

  சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை டாடா மோட்டார்ஸ் அமைத்துள்ளது. 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. பனப்பாக்கம் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தியை முதலமைச்சர்...

தூய்மைப் பணியாளர்கள் உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.02.2026) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட...

நாடாளுமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

  டெல்லி : நாடாளுமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் தேசிய படை என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். டெல்லியில் ஒரே...

டி20 உலகக்கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் போட்டியில் நீடிக்கும் இழுபறி: நிபந்தனைகள் விதித்த பாகிஸ்தான்

கொழும்பு: வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், பாகிஸ்தான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். நேற்று ஐசிசி அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்...

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 உயர்ந்து ரூ.300க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. வாரத்தின்...

TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம்!

  சென்னை: TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்மை தேர்வு 8ம் தேதி நேற்று (08.02.2026) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு...

மோடி - அன்வர் இப்ராகிம் முன்னிலையில் கையெழுத்து: இந்தியா-மலேசியா இடையே 11 ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வர்த்தக ஒத்துழைப்பை வலுவாக்க உறுதி

  கோலாலம்பூர்: பிரதமர்கள் மோடி-அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இந்தியா-மலேசியா இடையே 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் ஆழமான இருதரப்பு ஒத்துழைப்புக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவருக்கு...

வேர்வைத்துளி சிந்திய அரசு ஊழியர்களுக்கு ரத்தக்கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களு உறுதியளிக்கப்பட்ட ஓய்வு ஊதி திட்டத்தை அறிவித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சென்னையில் இன்று நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டு...

டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து!

மும்பை: 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தங்களது முதல் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி நேபாளத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் (1...