Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி - முத்தான வீட்டுக் குறிப்புகள்...

நன்றி குங்குமம் தோழி

1.கொய்யாப்பழம் தினம் ஒன்று வீதம் நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும்.

2.வாழைப்பூவை சாறெடுத்து பனங்கற்கண்டோடு சேர்த்துக் குடித்தால் உதிரப்போக்கு, வெள்ளைப் படுதல் சரியாகும்.

3. தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட்டுக் காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும்.

4.ரசத்தை அடுப்பில் இருந்து இறக்கும் முன் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலையை பொடி செய்து தூவினால் மணமாக இருக்கும்.

5.முட்டையை அரிசி தவிடு அல்லது கோதுமை தவிட்டில் வைத்தால் ஒரு மாதமானாலும் கெடாது.

6.வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவையான போது தோசை மாவில் 2 ஸ்பூன் கலந்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்.

7.மாங்காய் துண்டுகளில் புளிப்பு அதிகமாக இருந்தால் சுண்ணாம்பு கலந்த தண்ணீரில் கழுவினால் புளிப்பு குறைந்து விடும்.

8.புதினா சட்னி செய்யும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலும் சிறிது வேர்க்கடலையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக இருக்கும்.

9.பக்கோடா கரகரப்பாக இருக்க வேண்டுமென்றால் மாவுடன் சிறிதளவு புளித்த தயிரும், நெய்யும் சேர்த்து பிசைய வேண்டும்.

10.ரவா உப்புமாவில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் ஒரு தக்காளியை அரைத்து கொதிக்கும் நீரில் கலந்து செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

11.பருப்பு வேகும்போது அதில் கொஞ்சம் பட்டையை சேர்த்தால் பருப்பு வெகுநேரம் கெடாது.

தொகுப்பு: எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.