Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தங்க மங்கைகள்…

நன்றி குங்குமம் தோழி

காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். 84 கிலோ + 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி மகுடம் சூடியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு, கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த ஆண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கும் நிலையில், மீராபாய் சானுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரு தண்டா.கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ட்ராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான ட்ராப் அணிகள் பிரிவில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், பிரீத்தி ரஜக் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 319 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான ஆஷிமா அஹ்லாவத்தும் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பி வந்து மகிழ்ச்சிஅடைந்தார். ஜூலை மாதம் லோனாடோவில் நடந்த தனது கடைசி சர்வதேச போட்டியான ISSF உலகக் கோப்பையில், ​​நீரு கவுண்ட்பேக்கில் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மணிமகள்