Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்: பெண் உள்பட 8 பேர் கைது

சென்னை: சென்னையில் இருந்து கார் மூலமாக ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தம் கடத்திய பெண் உள்பட 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் யானை தந்தம் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வனச்சரக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுஅவ்வழியே சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போதுகாரின் உள்ளே மறைத்து வைத்திருந்த இரண்டு யானை தந்தம் சிக்கியது. இதையடுத்துவனத்துறை அதிகாரிகள் காரில் வந்த 4 பேர் மற்றும் சுங்கச்சாவடி அருகே யானை தந்தம் வாங்கிச் செல்ல காத்திருந்த ஒரு பெண் உள்பட 8 பேரையும் செங்கல்பட்டு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில்சென்னையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான யானை 2 தந்தங்களை விற்பனை செய்ய காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்துயானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட பெண் உள்பட 8 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும்யானை தந்தங்கள்கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர்8 பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.