தேவையானவை:
உதிராக வடித்த சாதம்-2 கப்,
இட்லி மிளகாய்ப் பொடி-ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சம்பழச் சாறு-3 டீஸ்பூன்,
கடுகு-அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன்,
பூண்டு-4பல்,
கறிவேப்பிலை-தேவையான அளவு,
எண்ணெய்-2 டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு,கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறுங்கள். அத்துடன் இட்லிமிளகாய்ப்பொடி, எலுமிச்சம்பழச் சாறு, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.


