Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருங்காயத்தின் பெருமைகள்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

பெருங்காயம் இல்லாத இந்திய சமையலை நினைத்துப் பார்க்கவே முடியாது. துளி அளவு பெருங்காயத்தூள் சேர்த்தாலே சாம்பார், ரசம் கமகமக்கும். பெருங்காயம் வெறும் மணமூட்டி மற்றும் சுவையூட்டி மட்டுமல்ல, அதில் ஏராளமான ஆரோக்கிய பலன்களும் உள்ளன.

* மணமான பெருங்காயத்தைப் பொடித்து, ஒரு டம்ளர் மோரில் சிறிது கலந்து பருகினால் உடல் குளிர்ச்சியாகும்.

* வாயுவின் அளவை அதிகரிக்கச் செய்யும் காய்கறிகளை சமைக்கும் போது பெருங்காயம் சேர்த்தால் வாயுத் தன்மை மட்டுப்படும்.

* பருப்பால் உண்டாகும் வாயுவை கட்டுப்படுத்த சமையலில் பெருங்காயம் சேர்ப்பது நல்லது.

* நெஞ்சின் நடுப்பகுதியில் வாயுவால் ஏற்படும் வலியைப் போக்க, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு சிறிது, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரைச்சாற்றில் அரைத்து, மாத்திரைகளாக்கி காய வைத்து, காலையும், மாலையும் ஒரு வாரம் சாப்பிட்டால் போதும்.

* ரத்தத்தை சூடாக்கி, நரம்புகளை பலப்படுத்தும் பெருங்காயம்.

* பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்டது.

* பெருங்காயத்தை நீர் விட்டு அரைத்து மார்பில் பற்று போட்டால் கக்குவான் இருமல் பிரச்னை தீரும்.

* இது குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை குறைக்கிறது. அதனால் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது. குடல் புண், குடல் புழுக்கள் போன்ற பிரச்னைகளையும் தீர்க்கிறது.ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழல் அழற்சி ஏற்படும் சமயங்களில் பெருங்காயத்தை உட்கொண்டால் உடனே தீர்வு காணலாம்.

* சிறு குழந்தைகளுக்கு சளி பிடித்து மூச்சு விட சிரமப்படும் சமயங்களில் பெருங்காயத்தூளில் சிறிதளவு வெந்நீர் இரண்டு, மூன்று சொட்டு விட்டு கரைத்து அதனுடைய தொண்டையிலும் நெஞ்சிலும் தடவி விட்டால் சளி, இருமல் சரியாகும்.

* வயிறு வீக்கம், வயிற்று வலியால் அவதிப்படுவோருக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து குடித்தால் வயிற்று வலி சரியாகும்.

தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, திருச்சி.