நன்றி குங்குமம் தோழி
* தினமும் வெள்ளாட்டு பாலை அருந்தி வந்தால் காசநோய் குணமாகும்.
* பலாப்பூவின் கசாயத்தை பருகினால் பெண்களுக்கு மாதவிடாய் சரியாக நடைபெறும்.
* நரைமுடி நீங்க வேண்டுமென்றால் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட வேண்டும்.
* மூலநோய் குணமடைய முள்ளங்கியுடன் மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு கலந்து உண்ண வேண்டும்.
* நீரிழிவு நோயாளிகள் வாழைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
* தூதுவளைக் கீரையின் சாறானது சளி, இருமல், வாயுக் கோளாறுகள் போன்றவற்றை நீக்குகிறது.
* மகிழம்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை முகர்ந்து வந்தால் தலைவலி குணமடையும்.
* சாதம் வடித்த கஞ்சியை அரை டம்ளர் எடுத்து, மோர் விட்டு சாப்பிட்டு வந்தால் அதிகமான ரத்தப்போக்கு நின்றுவிடும்.
* இரவில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து மோரில் போட்டு ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நாளடைவில் வாயுத் தொல்லைகள் நீங்கும்.
- டி.லதா, நீலகிரி.