நன்றி குங்குமம் தோழி
* இஞ்சிச் சாற்றுடன் பாலை கலந்து காய்ச்சி குடித்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
* இஞ்சியை லேசாக சுட்டு நறுக்கி உப்பில் தொட்டு தின்றால் பித்த நோய்கள் பாதிக்காது.
* இஞ்சி பச்சடியில் சாதம் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.
* இஞ்சியை உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் ஊளைச் சதை குறையும். ரத்தத்தில் கொழுப்பு சேராது.
* இஞ்சிச்சாறு, வெங்காயச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு மூன்றையும் சம அளவு எடுத்துக் கலந்து தினசரி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
* இஞ்சிச் சாறுடன் சின்ன வெங்காயச் சாறும் கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி நின்று விடும்.
* இஞ்சிச் சாற்றை வயிற்றில் தொப்புளைச் சுற்றி தடவினால் சீதளக் கோளாறுகளால் ஏற்படும் பேதி உடனே நின்று விடும்.
* இஞ்சிச் சாற்றை தினமும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
* இஞ்சியை இடித்து சாறு எடுத்து, தணலில் சூடாக்கி, நெற்றிப் பொட்டுகளில் தடவி வைத்திருந்து பின் குளித்தால் தலைபாரம், தலைவலி குறையும்.
* இஞ்சியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு குணமாகும்.
* இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தை உணவுடன் சேர்த்து வந்தால் வாயு பிரச்னை தீரும்.
* தேனில் இஞ்சியை நறுக்கிப் போட்டு 48 நாள் வெயிலில் வைத்திருந்து எடுத்து சாப்பிட்டால் எந்த நோய்க்கும் நல்லது.
* இஞ்சிச் சாறு எடுத்து துணியில் வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.
* இஞ்சிச் சாற்றுடன் சிறிது சீரகம், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் நிற்கும். நன்கு ஜீரணமாகும்.
* இஞ்சியின் ேதாலை நன்கு செதுக்கி விட்டு நன்றாக நசுக்கி சாறெடுத்து, தேநீர் கொதிக்கும் போது சேர்த்து வடிகட்டி குடித்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
* இஞ்சி, பூண்டு ஆகியவற்றை இடித்து சாறு பிழிந்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
* இஞ்சியை மை போல் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். இருமல், இளைப்பு, மயக்கம், வாயு குணமாகும்.
தொகுப்பு: இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.