Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

திருப்புத்தூர், மே 31: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் துரை மகன் பூமிநாதன் (19). இவர் தனது உறவினர் முருகன் என்ற 10 வயது சிறுவனுடன் விராமதி கிராமத்தில் உள்ள பேய் கண்மாய்க்கு அருகில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்று தண்ணீருக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால், மேலே நின்ற முருகன் என்ற சிறுவன் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தண்ணீருக்குள் சென்று பார்த்த பொழுது, பூமிநாதன் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் பலியானர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கீழச்சிவல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பூமிநாதனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்