தேன்கனிக்கோட்டை, ஜூலை 11: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே வானமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(26). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 8ம் தேதி பணி முடிந்து, இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வானமங்கலம் அருகே பஞ்சேஸ்வரம் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய பைக், நடுரோட்டில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், தளி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement