Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதியவரை பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

திருச்சி, ஜூன் 11: திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் ஜூன் 8ம் தேதி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஒரு தனியார் மதுபான பாருக்கு சென்றார். தேபோல் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், குருமூர்த்தி, பரணி ஆகிய மூவரும் மது அருந்த வந்தனர். அப்போது செல்வராஜ் மற்றும் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்துக் கொண்டிருந்த மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலால் செல்வராஜை தாக்கினர். இதில் செல்வராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவானைக்கோவில் வடக்கு 5வது பிரகாரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய குருமூர்த்தி, பரணி ஆகிய இருவரை போலீசார் தேடுகின்றனர்.