Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல்லியாம்பதி அருகே கரடி தாக்கியதில் பணியாளர் படுகாயம்

பாலக்காடு, ஜூன் 28: பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி அருகே சந்திரமலை பகுதியில் பணியாளரை கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.

நெல்லியாம்பதி சந்திரமலை அருகே கொட்டயம்க்காடு டிவிஷனுக்கு உட்பட்ட ராணிமேடு எஸ்டேட்டில் மேற்கூரை பணிக்கு வந்தவர் திருச்சூரை சேர்ந்த சந்திரபாபு (56). இவர் அங்கு ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வீட்டின் அருகிலுள்ள கழிவறைக்கு செல்வதற்காக வெளியே வந்தவர் கரடியிடம் சிக்கியுள்ளார். அவரை கரடி கை, கால்களில் தாக்கி காயப்படுத்தியது. இதனால் சந்திரபாபு கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சக ஊழியர்கள், எஸ்டேட் தோட்டத்தொழிலாளர்கள் அவரை கரடியிடம் இருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நெம்மாரா அரசு சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல், சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நெல்லியாம்பதி வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.