Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

விருதுநகர், நவ. 22: விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி சூடம் வியாபாரி பலியானார். விருதுநகர் அருகே நந்திரெட்டிபட்டியை சேர்ந்தவர் பழனி முருகன் (47). இவர் வீட்டில் சூடம் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.  நேற்று முன்தினம் பழனி முருகன் வீட்டில் தண்ணீர் மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்ததும் ஆமத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.