ஏழாயிரம்பண்ணை, செப்.22: வெம்பக்கோட்டை அருகே ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அஸ்வின் குமார் (21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது டூவீலரில், ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்துப்பட்டி கண்மாய் அருகே எதிரே வந்த டிராக்டர் மோதி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது தந்தை தமிழ்மணி அளித்த புகாரில், ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிந்து, ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement