ராஜபாளையம், செப்.18: ராஜபாளையத்தில் தந்தை பெரியார் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு நகர அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர தெற்கு வடக்கு செயலாளர்கள் பரமசிவம், வக்கீல் துரை முருகேசன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாப்புராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் அழகுராணி, தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், மகளிர் அணி நகரச் செயலாளர் அழகுராணி மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement