Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பைக் கவிழ்ந்து விபத்து

சிவகாசி, அக்.11: பைக் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் மகாலிங்கம்(49). இவர் தனது உறவினரான பாண்டி(50) என்பவருடன் அருப்புக்கோட்டையில் இருந்து திருத்தங்கல்லுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்தங்கல்லில் உள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் வரும் போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.