Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி, செப். 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் கிரி(17). இவரது வீட்டு பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில் சின்னசேலம் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கிரி வீட்டின் பின்புறம் 4 கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து கிரியை கைது செய்தனர்.