விருத்தாசலம், டிச. 9: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டம், அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (35). இவரது மனைவி சங்கீதா(32). இருவரும் செங்கல் அறுக்கும் தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 14 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக செந்தில் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மறு அறையில் சங்கீதா தனது சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பெண்ணாடம் போலீசார் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


