இந்திய தேர்தல் ஆணைய பதிவில் இருந்து வேலூர் மாவட்ட அரசியல் கட்சி நீக்கம் கலெக்டர் தகவல் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாததால்
வேலூர், ஆக.19: இந்திய தேர்தல் ஆணைய பதிவில் இருந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட கட்சி நீக்கப்படுவதாக கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணைய பதிவில் இருந்து அரசியல் கட்சி பெயர் நீக்கப்படுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி 2019ம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் அல்லது இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடாத வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘டாக்டர் அம்பேத்கர் பீப்பிள் ரெவலூசன் மூவ்மென்ட்’ கட்சியினை இந்திய அரசியலமைச் சட்டம் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29ஏ-ன் படி இந்திய தேர்தல் ஆணையத்தால் பராமரிக்கப்படும் பதிவு ெசய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவிலிருந்து நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கட்சியின் தலைவர் அல்லது ெபாதுச்ெசயலாளர் காரண விளக்கம் ேகாரும் (ஷோ காஸ் நோட்டீஸ்) கடிதத்துடன் உரிய ஆவணங்களுடன் விளக்கக் கடிதத்தினையும் சத்தியபிரமாணப் பத்திரத்தினையும் சம்மந்தப்பட்ட ஆவணங்களுடன் 26.08.2025க்குள் ெசன்னை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க ெதரிவிக்கப்பட்டுள்ளது. ேமலும் கட்சியின் தலைவர் அல்லது ெபாதுச்ெசயலாளரோ 26.08.2025ம் ேததிக்குள் ேநரில் ஆஜராகும்படியும், இந்நேர்வில் தேர்தல் ஆணையத்தின் முன்பு ேநரில் ஆஜராகவில்லை என்றால், இக்கட்சி பதில் ெதரிவிக்க விருப்பமில்லை என்று கருதப்பட்டு தொடர் நடவடிக்கை ேமற்ெகாண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவு ெசய்யப்பட்ட கட்சியிலிருந்து நீக்கம் ெசய்யப்படும் என்று ெதரிவிக்கப்பட்டு காரண விளக்கம் ேகாரும் குறிப்பாணை ெசன்னை தலைமைத் தேர்தல் அலுவலரால் ெவளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.