Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வீடுபுகுந்து தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை முகமூடி ஆசாமிகளுக்கு போலீஸ் வலை காட்பாடியில் இரவு பரபரப்பு

வேலூர், அக்.7: காட்பாடியில் இரவு வீடுபுகுந்து தம்பதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், விவசாயி. இவருடைய மனைவி சாந்தம்மாள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அமர்ந்திருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டில் புகுந்தது. அங்கு தனியாக இருந்த தம்பதியரை தாக்கினர். பின்னர் சாந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, வீட்டில் இருந்த ரூ.85 ஆயிரம் கொள்ளையடித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.

முகமூடி கொள்ளையர்கள் சென்ற பிறகு விவசாய தம்பதியினர் கூச்சலிட்டனர். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்து இருந்த இருவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய தம்பதியினரிடம் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்பநாய் டோரா வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா உள்ளதா என போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.