அணைக்கட்டு, நவ. 6:அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பனந்தோப்புபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (52). இவர் கிராமத்தில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் கறி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஊனை பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரதன் என்பவர் அடிக்கடி கறி வாங்கி செல்வது வழக்கம். இதில் அவர்களுக்குள் கறி வாங்குவதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இதற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 2 தேதி ஞாயிற்றுக்கிழமை பரதன் இவரிடம் மீண்டும் கறி வாங்கியபோது அதற்கு பணம் கேட்டுள்ளார். அதில் அவர்கள் இருவருக்கும் மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டு இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். இதில் கோபமடைந்த பரதன் ரவி கடையில் இருந்த கத்தியை எடுத்து ரவியை வெட்டியதில் தலையில் பின் பக்கம் காயம் ஏற்பட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். தொடர்ந்து இது குறித்து ரவி அணைக்கட்டு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் பரதன் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
