Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாடு திருடியவர் கைது

திருச்சி, செப்.27: திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பசுமா ட்டை திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் வீரே ஸ்வரம் கல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (64). இவர் கடந்த செப்.13ம் தேதி தனது வீட்டின் முன்பு பசு மாட்டை கட்டி வைத்திருந்தார்.

இந்த பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து மணிமேகலை ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் போில் போலீசார் வழக்கு பதிந்து கரூர் மாவட்டம் குளித்தலை பழைய மருத்துவமனை தெருவைச் சேர்ந்த கர்ணன் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.