Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிகரெட் திருடிய 2 சிறுவர்கள் கைது

சமயபுரம், அக். 17: திருச்சி அருகே மளிகை கடை பூட்டை உடைத்து சிகரெட் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேலகல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(48). கல்பாளையம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 13 ம் தேதி இரவு 10 மணியளவில் சரவணன் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே மேஜை டிராயரில் இருந்த ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் விற்பனைகாக வைத்திருந்த 5 பாக்ஸ் சிகரெட் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சரவணன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களையும் போலீசார் பிடித்து, அவர்களிடம் இருந்து ரூ.,2000 பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுவர்களின் பெற்றோர்களை போலீசார் அழைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி, சிறுவர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.