துவரங்குறிச்சி, செப்.17: துவரங்குறி ச்சி அருகே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு பிடிபட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த முக்கன் பாலத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சேவலை முழுங்கியவாறு கிடந்தது.
இதனை கண்ட தோட்டத்தின் உரிமையாளர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலைய அலுவலர் மனோகர் சிறப்பு அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.