Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிறுமியிடம் அத்துமீறல் போக்சோ வழக்கில் வாலிபர் கைது

திருச்சி, அக். 13: திருச்சி புத்தூர் நான்கு சந்திப்பு சாலைப் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (எ) ரஞ்சித் (32). இவர், திருச்சியை சேர்ந்த சற்று மனநலம் பாதித்த 17 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 9ம் தேதி அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது சகோதரி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். ஜங்ஷன் மேம்பாலம் பாலம் வில் வடிவ மாதிரியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. புதிய கொள்ளிடம் ஆற்று பாலத்தை போலவேஜங்ஷன் மேம்பாலமும் இருக்கும்.