Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயிலில் அடிபட்டு பலி

திருச்சி, செப்.11: பொன்மலை-திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தனியார் பள்ளி அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் நேற்று காலை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

தகவலறிந்த ரயில்வே எஸ்ஐ கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர் காவி கலரில் வெள்ளை கட்டம் போட்ட சட்டையும், பிரவுன் கலர் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார் இவரை பற்றி தகவல் தெரிந்தால் திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய 94981 39752, 90805 63321 தகவல் தெரிவிக்கலாம்.