திருவெறும்பூர், ஆக.9: திருவெறும்பூர் அருகே பொது பணித்துறையில் வேலை பார்த்து வந்த மாற்றுத்திறனாளி பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலை 7வது தெருவை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி கண்ணகி (45). இவர் மாற்றுத்திறனாளியான இவர் திருச்சி பொதுப்பணி துறையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 6ம் தேதி வேலைக்கு செல்வதற்காக தனது மூன்று சக்கர வாகனத்தில் சென்ற பொழுது, மற்றொரு வாகனத்தில் வந்தவர் மோதியதில் கண்ணகி கீழே விழுந்துள்ளார். இதில் உட்காயம் அடைந்த அவரை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று கண்ணகி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை வீட்டில் இருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கண்ணகியை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணகி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.